கார் – பிக்அப் வேன் நேருக்கு நேர் மோதல்; 2 பெண்கள் பலி!

 

கார் – பிக்அப் வேன் நேருக்கு நேர் மோதல்; 2 பெண்கள் பலி!


புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்டம் மாத்தூர் அருகே கார் மீது பிக்அப் வேன் மோதிய விபத்தில் 2 பெண்கள் உயிரிழந்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி கருக்காக்காடு பகுதியை சேர்ந்தவர் அருள்தாஸ். இவர் இன்று திருச்சியில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குடும்பத்துடன் காரில் சென்று கொண்டிருந்தார். மாத்தூர் அருகே திருச்சி – புதுக்கோட்டை சாலையில் கைனாங்கரை என்ற இடத்தில் சென்றபோது, எதிரே வந்த பிக்அப் வேன் திடீரென டயர் வெடித்ததால் கட்டுப்பாட்டை இழந்து, கார் மோதியது.

கார் – பிக்அப் வேன் நேருக்கு நேர் மோதல்; 2 பெண்கள் பலி!

இதில் கார் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இதில், அருள்தாஸ் மனைவி மலர்விழி சம்பவ இடத்திலேயே உரியிரிழந்தார். மேலும், படுகாயமடைந்த அருள்தாஸ், இனிகோமேரி ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு, சிகிச்சை பலனின்றி இனிகோமேரி உயிரிழந்தார். தகவல் அறிந்த மாத்தூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.