சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்… அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய பயணிகள்!

 

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்… அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய பயணிகள்!

திருப்பூர்

காங்கேயம் அருகே சாலையில் சென்ற ஆம்னி வேன் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்தவர் காதர் பாட்சா. இவர் நேற்று முன்தினம் காங்கேயத்தில் உள்ள தனது உறவினரின் வீட்டிற்கு குடும்பத்தினருடன் சென்றிருந்தார். பின்னர் நேற்று காலை அனைவரும் ஆம்னிவேனில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். காங்கேயம் அடுத்த தண்ணீர்பந்தல் பகுதியில் சென்றபோது வேனின் முன்பகுதியில் இருந்து திடீரென கரும்புகை வெளியானது.

சாலையில் திடீரென தீப்பற்றி எரிந்த கார்… அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பிய பயணிகள்!

இதனை கவனித்த காதர் பாட்சா, உடனடியாக வாகனத்தை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு குடும்பத்தினரை வெளியேற்றினார். சற்று நேரத்தில் காரில் தீப்பற்றி மளமளவென மற்ற பகுதிகளுக்கும் பரவியது. சாலையில் கார் பற்றி எரிந்ததை கண்ட அந்த பகுதி மக்கள் காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து, காரில் எரிந்த தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த விபத்தில் ஆம்னிவேன் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. தீவிபத்து குறித்து காங்கேயம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.