×

மனைவி இறந்த சோகத்தில் கணவர் தூக்கிட்டு தற்கொலை… மனைவி கல்லறை அருகிலேயே புதைக்க உருக்கமான வேண்டுகோள்!

கன்னியாகுமரி கன்னியாகுமரி அருகே மனைவி இறந்த வேதனையில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் பரமசிவம் – சாருதா (35). தம்பதியினர். இவர்களுக்கு குழந்தை இல்லை. தம்பதியினர் இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் மிகுந்த அன்புடன் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாருதாவிற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது. இதனால் அவர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
 

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே மனைவி இறந்த வேதனையில் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் பகுதியை சேர்ந்தவர்கள் பரமசிவம் – சாருதா (35). தம்பதியினர். இவர்களுக்கு குழந்தை இல்லை. தம்பதியினர் இருவரும் ஒருவர் மீது மற்றொருவர் மிகுந்த அன்புடன் இருந்து வந்துள்ளனர். இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சாருதாவிற்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டு உள்ளது.

இதனால் அவர் வீட்டில் இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில், நேற்று உடல்நிலை மோசமடைந்ததால் உறவினர்கள் அவரை, குமரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைததுச் சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி சாருதா உயிரிழந்தார். மனைவி உயிரிழந்ததால் மனைமுடைந்த பரமசிவம், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை செய்வதற்கு முன்பு அவர் உருக்கமுடன் எழுதிய கடிதத்தில், சாருதாவை புதைக்கும் இடத்தின் அருகிலேயே தன்னையும் புதைக்குமாறு, அவர் கேட்டு கொண்டிருந்தார். மனைவி இறந்ததால் கணவர் தற்கொலை செய்த நிகழ்வு, அவரது உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினரை பெரும் சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.