×

குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்து, கணவர் தற்கொலை!

தர்மபுரி தர்மபுரி அருகே குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு, கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரி அருகே உள்ள பிடமனேரி கோவிந்த தாஸ் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (37). இவர் மருந்து நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திவ்யா(32) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்றிரவு வழக்கம் போல் இருவருக்கும்
 

தர்மபுரி

தர்மபுரி அருகே குடும்ப தகராறில் மனைவியை கொலை செய்துவிட்டு, கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தர்மபுரி அருகே உள்ள பிடமனேரி கோவிந்த தாஸ் தெருவை சேர்ந்தவர் ராஜ்குமார் (37). இவர் மருந்து நிறுவனத்தில் விற்பனை பிரதிநிதியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு திவ்யா(32) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில், கணவன் – மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

நேற்றிரவு வழக்கம் போல் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த ராஜ்குமார் மனைவியை கொலை செய்துள்ளார். பின்னர், தனது தாயாருக்கு போன் செய்து குழந்தைகளை பார்த்து கொள்ளுமாறு கூறிய ராஜ்குமார், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதுகுறித்து உறவினர்கள் அளித்த தகவலின் பேரில் தர்மபுரி நகர போலீசார் இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.