×

கிணற்றில் தவறி விழுந்து சிறுமி பலி… மீட்க சென்ற தந்தையும் உயிரிழந்த சோகம்!

தருமபுரி அரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், மகளை மீட்க சென்ற தந்தையும் நீரில் மூழ்கி உயிரிழந்தார். தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கைலாயபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது 4 வயது மகள் சாய் பிரனிதா. இன்று காலை முருகேசன், இயற்கை உபாதை கழிப்பதற்காக சாய்பிரனிதாவை அழைத்துக் கொண்டு, அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றார். அப்போது, எதிர்பாரத விதமாக சிறுமி
 

தருமபுரி

அரூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து 4 வயது சிறுமி உயிரிழந்த நிலையில், மகளை மீட்க சென்ற தந்தையும் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் அரூர் அடுத்த கைலாயபுரம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன். இவர் அரசுப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வந்தார். இவரது 4 வயது மகள் சாய் பிரனிதா. இன்று காலை முருகேசன், இயற்கை உபாதை கழிப்பதற்காக சாய்பிரனிதாவை அழைத்துக் கொண்டு, அருகில் உள்ள தோட்டத்திற்கு சென்றார். அப்போது, எதிர்பாரத விதமாக சிறுமி அங்கிருந்த விவசாய கிணற்றில் தவறி விழுந்தார்.

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த முருகேசன், உடனடியாக கிணற்றில் குதித்து சிறுமியை மீட்க முயன்றார். அப்போது, நீச்சல் தெரியாததால் இருவரும் கிணற்றில் மூழ்கினர். இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த அரூர் தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். சுமார் 2 மணிநேர தேடலுக்கு பின் அவர்கள் முருகேசன், சிறுமி சாய்பிரணிதா ஆகியோரை உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டனர்.

இதனையடுத்து, போலீசார் உடல்களை மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் அரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கிணற்றில் மூழ்கி தந்தை – மகள் பலியான சம்பவம் கைலாயபுரம் கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.