கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர் உயிரிழப்பு!

 

கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர் உயிரிழப்பு!

பெரம்பலூர்

பெரம்பலூர் அருகே கிணற்றில் தவறி விழுந்த 10 ஆம் வகுப்பு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகேயுள்ள திருமாந்துறையை சேர்ந்தவர் தர்மராஜ். இவரது மகன் பெரியசாமி (15). இவர் அரசு பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்தார். விடுமுறை காரணமாக வீட்டில் இருந்த பெரியசாமி, சில நாட்களுக்கு முன் செங்குணம் பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றிருந்தார். இந்த நிலையில், நேற்று பிற்பகல் பெரியசாமி, அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் அங்குள்ள விவசாய கிணற்றுக்கு குளிப்பதற்காக சென்றுள்ளார்.

கிணற்றில் தவறி விழுந்து பள்ளி மாணவர் உயிரிழப்பு!

அப்போது, எதிர்பாராத விதமாக மேலே இருந்து கிணற்றில் தவறி விழுந்த பெரியசாமி, நீச்சல் தெரியாததால் நீரில் மூழ்கினார். இதுகுறித்த உடனிருந்தவர்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த தீயணைப்புத்துறை வீரர்கள், கிணற்றில் இறங்கி தேடுதல் பணியில் ஈடுபட்டனர். ஆனால், தண்ணீர் அதிகளவு இருந்ததால் தேடுதல் பணியில் சிரமம் ஏற்பட்டது.

தொடர்ந்து, மின் மோட்டார்கள் மூலம் கிணற்றில் இருந்த தண்ணீரை வெளியேற்றிய தீயணைப்பு வீரர்கள் இரவு 11 மணியளவில் சிறுவனின் சடலத்தை மீட்டனர். மருவத்தூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.