×

இருக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், பெண் பலி!

கோவை கோவை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார். கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த இடையர்பாளைம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி(34). தனியார் நிதி நிறுவன ஊழியர். இவரது மனைவி கவுசல்யா(21). இவர் நேற்று தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். துடியலூர் அடுத்த கே.என்.ஜி புதூர் அருகே சென்றபோது, கவுசல்யா வாகனத்தின் மீது எதிரே வந்த லாரி மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் கவுசல்யா பலத்த
 

கோவை

கோவை அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் துடியலூர் அடுத்த இடையர்பாளைம் பகுதியை சேர்ந்தவர் மாடசாமி(34). தனியார் நிதி நிறுவன ஊழியர். இவரது மனைவி கவுசல்யா(21). இவர் நேற்று தனது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

துடியலூர் அடுத்த கே.என்.ஜி புதூர் அருகே சென்றபோது, கவுசல்யா வாகனத்தின் மீது எதிரே வந்த லாரி மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் கவுசல்யா பலத்த காயமடைந்தார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே கவுசல்யா பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்த துடியலூர் போலீசார் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, லாரி ஓட்டுநரை கைது செய்தனர்.