இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், கட்டிட மேஸ்திரி பலி!

 

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், கட்டிட மேஸ்திரி பலி!

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில் கட்டிட தொழிலாளி உயிரிழப்பு

காஞ்சீபுரம் மாவட்டம் ஓரிக்கை அப்பாவு நகர் பகுதியை சேர்ந்தவர் ஜானகி ராமன். கட்டிட மேஸ்திரி. இவர் இன்று மாலை பணிமுடித்து காஞ்சிபுரத்தில் இருந்து ஓரிக்கை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், கட்டிட மேஸ்திரி பலி!

வெளிங்கபட்டரை கீழ்ரோடு பகுதியில் சென்றபோது, எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி ஒன்று இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில் வாகனத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஜானகிராமன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

தகவல் அறிந்த காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விபத்து பகுதிக்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.