×

கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த மனைவி… நேரில் பார்த்த கணவருக்கு நேர்ந்த கொடூரம்…

கோவை கோவை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை அடித்துக்கொன்று விட்டு நாடகமாடிய மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர். கோவை மாவட்டம் மதுரைக்கரை அடுத்த சீராபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி அமுதா. இவர்கள் மதுக்கரை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். அப்போது, நிறுவனத்தில் பணிபுரிந்த சங்கர் என்பவருடன், அமுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக் காதலாக மாறி உள்ளது. இந்த நிலையில், நேற்றிரவு அமுதாவின் வீட்டிற் சென்ற சங்கர், அவருடன்
 

கோவை

கோவை அருகே கள்ளக்காதல் விவகாரத்தில் கணவரை அடித்துக்கொன்று விட்டு நாடகமாடிய மனைவி மற்றும் அவரது ஆண் நண்பரை போலீசார் கைது செய்தனர்.

கோவை மாவட்டம் மதுரைக்கரை அடுத்த சீராபாளையத்தை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி அமுதா. இவர்கள் மதுக்கரை பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். அப்போது, நிறுவனத்தில் பணிபுரிந்த சங்கர் என்பவருடன், அமுதாவிற்கு பழக்கம் ஏற்பட்டு, கள்ளக் காதலாக மாறி உள்ளது.

இந்த நிலையில், நேற்றிரவு அமுதாவின் வீட்டிற் சென்ற சங்கர், அவருடன் தனிமையில் இருந்துள்ளார். அப்போது, அங்கு வந்த நாகராஜன், இதனை கண்டு சங்கருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார். ஒரு கட்டத்தில் இருவருக்கும் கைகலப்பு ஏற்பட்ட நிலையில், ஆத்திரமடைந்த சங்கர் சுத்தியலால் நாகராஜின் தலையில் அடித்துக் கொன்றார்.

பின்னர், அவரது உடலை வீட்டின் அருகில் இருந்த மண்மேட்டில் புதைத்து விட்டு எதுவும் நடக்காதது போல் இருவரும் வீட்டிற்கு சென்றுள்ளனர். காலையில் மண் மேட்டில் நாகராஜனின் உடல் பாதி புதைந்த நிலையில் கிடப்பதை கண்ட அந்த பகுதி மக்கள், மதுக்கரை போலீசாருக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது, நாகராஜனை கள்ளக் காதலனுடன் சேர்ந்து கொலை செய்து விட்டு, அமுதா நாடகமாடியது வெளிச்சத்திற்கு வந்தது. இதனையடுத்து அமுதா மற்றும் அவரது கள்ளக்காதலன் சங்கர் ஆகியோரை போலீசார் கைதுசெய்தனர்.