நெல்லை அருகே கோவில் பூசாரி வெட்டி படுகொலை!

 

நெல்லை அருகே கோவில் பூசாரி வெட்டி படுகொலை!

நெல்லை

நெல்லை அருகே கோவில் பூசாரி மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நெல்லை மாவட்டம் சீவலப்பேரி பகுதியை சேர்ந்தவர் சிதம்பரம் (45). இவர் அங்குள்ள சுடலைமாட சுவாமி கோயிலில் பூசாரியாக உள்ளார். அதே பகுதியை சேர்ந்தவர் நடராஜ பெருமாள் (53). நண்பர்களான இருவரும் நேற்று மாலை வீட்டின் அருகே நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் இருவரையும் சரமாரியாக வெட்டினர்.

நெல்லை அருகே கோவில் பூசாரி வெட்டி படுகொலை!

இதில், பலத்த காயமடைந்த சிதம்பரம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், நடராஜ பெருமாளுக்கும் பலத்த வெட்டுக்காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு, நெல்லை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சீவலப்பேரி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

பின்னர், உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய போலீசார், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சுடலைமாட சுவாமி கோவில் கொடை விழாவில் கடைகள் அமைப்பது தொடர்பாக இரு பிரிவினர் இடையே மோதல் இருந்து வந்த நிலையில், அதன் காரணமாக சிதம்பரம் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.