×

கோவையில் வீட்டின் பூட்டை உடைத்து 100 சவரன் நகைகள் கொள்ளை!

கோவை கோவையில் பெண் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் 100 சவரன் தங்க நகைகளை திருடி சென்றனர். கோவை பீளமேடு ஜி.ஆர்.ஜி நகரை சேர்ந்தவர் கோகிலா (48). தொழிலதிபர். இவர் நீலகிரியில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் குடும்பத்துடன் சென்றிருந்தார். தொடர்ந்து, இன்று காலை வீட்டிற்கு திரும்பி உள்ளார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கோகிலா, உள்ளே சென்று பார்த்தார். அப்போது,
 

கோவை

கோவையில் பெண் தொழிலதிபர் வீட்டின் பூட்டை உடைத்து, மர்மநபர்கள் 100 சவரன் தங்க நகைகளை திருடி சென்றனர்.

கோவை பீளமேடு ஜி.ஆர்.ஜி நகரை சேர்ந்தவர் கோகிலா (48). தொழிலதிபர். இவர் நீலகிரியில் நடந்த உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக நேற்று முன்தினம் குடும்பத்துடன் சென்றிருந்தார். தொடர்ந்து, இன்று காலை வீட்டிற்கு திரும்பி உள்ளார்.

அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்துள்ளது. இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கோகிலா, உள்ளே சென்று பார்த்தார். அப்போது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு 100 சவரன் தங்க நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் பீளமேடு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தார். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்களை வரவழைத்து, தடயங்களை சேகரித்தனர்.

தொடர்ந்து இதுகுறித்து கோகிலா அளித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அந்த பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.