உயர் ரக நாய்களை, காரில் வந்து திருடும் கும்பல்… பழனியில் பரபரப்பு…

 

உயர் ரக நாய்களை, காரில் வந்து திருடும் கும்பல்… பழனியில் பரபரப்பு…

திண்டுக்கல்

பழனி நகரில் வீடுகளில் வளர்க்கப்படும் உயர் ரக நாய்களை, காரில் வந்து திருடி சென்ற மர்மநபர்களால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனி டவுன் சண்முகபுரத்தை சேர்ந்தவர் நடராஜன். முன்னாள் மின்வாரிய ஊழியர். இவரது தனது வீட்டில் விலை உயர்ந்து பக் ரக நாயை வளர்த்து வந்துள்ளார். சம்பவத்தன்று நடை பயிற்சிக்காக நடராஜன், தனது நாயை அவிழ்த்து விட்டுள்ளார்.

உயர் ரக நாய்களை, காரில் வந்து திருடும் கும்பல்… பழனியில் பரபரப்பு…

அப்போது, சாலையில் நடந்துசென்ற அந்த நாயை காரில் வந்த மர்மநபர் ஒருவர் கண்ணிமைக்கும் நேரத்தில் தூக்கி கொண்டு தப்பிச் சென்றார். இதனை கண்ட நடராஜன், பழனி நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் சம்பவ பகுதியில் உள்ள சிசிடிவி பதிவுகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

அப்போது, காரில் பெண் உள்பட இருவர் இருந்தது தெரியவந்தது. மேலும், போலீஸ் விசாரணையில் பழனி நகரில் பல்வேறு இடங்களில் உயர் ரக நாய்கள் திருடு போனதும் தெரியவந்தது. இதனை அடுத்து, சிசிடிவி பதிவின் அடிப்படையில் நாய்களை திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.