என்.எல்.சி ஊழியர் வீட்டில் 13 சவரன் நகைகள் கொள்ளை!
Mar 22, 2021, 20:55 IST1616426710000
கடலூர்
நெய்வேலியில் என்எல்சி ஊழியர் வீட்டின் பூட்டை உடைத்து 13 சவரன் நகைகளை மர்மநபர்கள் திருடி சென்றனர்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி வட்டம் 26-இல் வசித்து வருபவர் ராஜேந்திரன். இவர் என்எல்சி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக ராஜேந்திரன் கடந்த கடந்த 10ஆம் தேதி குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றிருந்தார்.
சிகிச்சை முடிந்து, கடந்த 19 ஆம் தேதி வீட்டிற்கு திரும்பினார். அப்போது, வீட்டின் பூட்டை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரன் உள்ளே சென்று பார்த்தார். அப்போது, பீரோ உடைக்கப்பட்டு 13 சவரன் நகைகள், வெள்ளி பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணம் திருடுபோனது தெரியவந்தது.
இதுகுறித்து ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில் தெர்மல் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.