×

புதுக்கோட்டை சிறுமி வன்கொடுமை வழக்கு: குற்றவாளி ராஜாவுக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளி ராஜாவை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கை விலங்கை கழட்டிவிட்டு ராஜா தப்பிச்சென்றதாகவும் அவரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இதையடுத்து தப்பியோடிய குற்றவாளி ராஜா முள்ளூர் காட்டுப்பகுதியில் பிடிபட்டார். இந்நிலையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ராஜாவுக்கு மீண்டும்
 

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்த சம்பவத்தில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த குற்றவாளி ராஜாவை போலீசார் மருத்துவ பரிசோதனைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் கை விலங்கை கழட்டிவிட்டு ராஜா தப்பிச்சென்றதாகவும் அவரை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்திருந்தனர். இதையடுத்து தப்பியோடிய குற்றவாளி ராஜா முள்ளூர் காட்டுப்பகுதியில் பிடிபட்டார்.

இந்நிலையில் 7 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான ராஜாவுக்கு மீண்டும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு குற்றவாளி அழைத்து வரப்பட்ட நிலையில் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.