“குற்றவாளிகள் தப்பித்த பின்பு போலீஸ் வருவது சினிமாவில் மட்டும் தான்” : 3 நிமிடத்தில் திருடர்களை பிடித்த போலீசாரை பாராட்டிய காவல் ஆணையர்!
சென்னை நீலாங்கரையில் சேர்ந்த பெண் ஒருவர் அதிகாலை 2 மணியளவில் காவல்துறை அவசர எண் 100க்கு அழைத்து தனது வீட்டின் முதல் தளத்தில் திருட்டு நடப்பதாக பதைபதைப்புடன் கூறியுள்ளார். இன்று2:00AMஅளவில்100 க்கு நீலாங்கரையில் இருந்து ஒரு பெண்2 திருடர்கள் தனது வீட்டின் முதல் தளத்தில் திருடுவதாக தெரிவித்தார்.இந்த தகவல் கிடைத்த 3 நிமிடத்தில் ரோந்து வாகனங்கள் அங்கு சென்று திருடியவர்களை பிடித்துஅசம்பாவிதம் ஏற்படாதவாறு காத்தனர்Chennai city police,at your service 24×7 pic.twitter.com/BV8IkqEnTW — DCP Adyar
Aug 11, 2020, 11:43 IST
சென்னை நீலாங்கரையில் சேர்ந்த பெண் ஒருவர் அதிகாலை 2 மணியளவில் காவல்துறை அவசர எண் 100க்கு அழைத்து தனது வீட்டின் முதல் தளத்தில் திருட்டு நடப்பதாக பதைபதைப்புடன் கூறியுள்ளார்.
பெண் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்த ரோந்து போலீசார் தகவல் கிடைத்த மூன்றே நிமிடத்தில் திருடர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். இதனால் அங்கு அசம்பாவிதம் தடுக்கப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த அப்பகுதி மக்கள் ரோந்து காவலர்களை பெரிதும் பாராட்டி மகிழ்ந்தனர்.