×

பாடல்களை ஒலிக்க செய்து எஸ்பிபி-க்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவமனை!

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு கடந்த 5ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிவித்தது. நேற்று முன்தினம் சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவக்குழுவுடன் ஆலோசித்தார். தற்போது எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகன் நேற்று சரண் கூறினார். அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கபட்டுள்ளதாகவும் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாச அளவு குறைக்கப்பட்டு உள்ளதாகவும் மருத்துவமனை
 

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியனுக்கு  கடந்த 5ஆம் தேதி கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகினது. இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவ நிர்வாகம் அறிவித்தது.

நேற்று முன்தினம் சுகாதாரத்துறை விஜயபாஸ்கர் மருத்துவமனைக்கு நேரில் சென்று மருத்துவக்குழுவுடன் ஆலோசித்தார். தற்போது எஸ்பிபி உடல்நிலை சீராக உள்ளதாக அவரது மகன் நேற்று சரண் கூறினார். அவருக்கு பிளாஸ்மா சிகிச்சை அளிக்கபட்டுள்ளதாகவும் அவருக்கு அளிக்கப்பட்டு வந்த செயற்கை சுவாச அளவு குறைக்கப்பட்டு உள்ளதாகவும் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

இந்நிலையில் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாடல்கள் மூலமும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தங்கியிருக்கும் எம்ஜிஎம் தனியார் மருத்துவமனையின் 6 ஆவது மாடியில் ஸ்பீக்கர்கள் அமைக்கப்பட்டு அவர் பாடிய பாடல்கள் ஒலிக்கப்பட்டு வருகிறது. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள எஸ்பிபி இசையால், இசைக்காக மீண்டு வருவார் என அவரது ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.