தமிழகத்தில் கோவில் திருவிழாக்களை நடத்த அனுமதி!
Jul 20, 2020, 12:02 IST1595226747000
அம்மன் திருக்கோயில்களின் நடைபெறவேண்டிய திருவிழாக்களுக்கு தலைமையிடத்தில் அனுமதி கோரியும் மேற்படி உற்சவ திருவிழா நிகழ்வுகள் காணொளி பதிவுகளை வலைஒளி சேனல் மூலம் பதிவேற்றம் செய்ய அனுமதி வேண்டி முன்மொழிவுகள் சார் நிலை அலுவலர்களிடம் இருந்து வந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் திருக்கோயில்கள் திருவிழா நடத்துதல் குறித்து அறிவிப்பு வெளியாகியுள்ளது.
- திருக்கோயில்களில் பழக்க வழக்கப்படி நடைபெறும் திருவிழாக்களுக்கு தலைமையிடத்தில் அனுமதி பெற வேண்டியதில்லை.
- திருவிழாக்கள் தொன்றுதொட்டு கடைபிடிக்கப்பட்டு வரும் பழக்க வழக்கங்கள் பணி மாறுதல் ஏதும் இன்றி திருக்கோயில் வளாகத்தில் நடைபெற வேண்டும்.
- திருவிழாக்கள் திருக்கோயில்களில் சொற்ப அளவிலான திருக்கோவில் பணியாளர்களை கொண்டு முக கவசம் அணிந்து 6 அடி சமூக இடைவெளி கடைப்பிடித்தும் நடைபெற வேண்டும்.
- இவ்விழாக்களில் உபயதாரர்கள், பக்தர்கள் கலந்து கொள்ள கண்டிப்பாக அனுமதி இல்லை.
- கொரோனா நோயில் இருந்து தற்காத்துக்கொள்ள அரசால் வழங்கப்பட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளில் கண்டிப்பாக கடைப்பிடித்தல் வேண்டும்।
- திருவிழாக்கள் தொடர்பாக மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி ஏதும் பெற வேண்டி இருப்பின் அனுமதியையும் பெற்று திருவிழாக்கள் நடத்தப்பட வேண்டும்.
- இவ்விழாவை காண பக்தர்கள் தங்கள் இல்லங்களில் இருந்து காணும் வகையில் வலைத்தள நேரடி ஒளிபரப்பு செய்ய நடவடிக்கை எடுக்கலாம்.