நெல்லை அருகே 8 மாத குழந்தை வெட்டிக்கொலை… பெண் தர மறுத்ததால் இளைஞர் வெறிச்செயல்…

 

நெல்லை அருகே 8 மாத குழந்தை வெட்டிக்கொலை… பெண் தர மறுத்ததால் இளைஞர் வெறிச்செயல்…

நெல்லை

நெல்லை அருகே பெண் தர மறுத்ததால் 8 மாத குழந்தையை வெட்டிகொன்று விட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர்.

நெல்லை மாவட்டம் பணங்குடி அடுத்த ரோஸ்மியாபுரம் பகுதியை சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் சிவசங்கர். இவர் திருக்குறுங்குடி அடுத்த மகிழடி பகுதியை சேர்ந்த செவிலியரை காதலித்து வந்துள்ளார். திருமணம் தொடர்பாக செவிலியரின் பெற்றோரான ரசல்ராஜ் – ஏபிசிபாயிடம் பேசியபோது அவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது.

நெல்லை அருகே 8 மாத குழந்தை வெட்டிக்கொலை… பெண் தர மறுத்ததால் இளைஞர் வெறிச்செயல்…

இதனால் ஆத்திரமடைந்த சிவசங்கர் நேற்று காலை பெண்ணின் வீட்டிற்கு அரிவாளுடன் சென்று தகராறில் ஈடுபட்டு உள்ளார். வாக்குவாதம் முற்றியதால், அவர் ரசல்ராஜ், ஏபிசிபாய் மற்றும் தூங்கி கொண்டிருந்த அவர்களது பேத்தியான 8 மாத குழந்தையையும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பியோடினார். இதில் மூவரும் பலத்த காயமடைந்தனர்.

தகவல் அறிந்த திருக்குறுங்குடி போலீசார், அவர்களை மீட்டு சிகிச்சைக்காக பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து, போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சிவசங்கரை தீவிரமாக தேடி வருகின்றனர்.