பைக் மீது லாரி மோதிய விபத்தில், பொறியியல் மாணவர் பலி!

 

பைக் மீது லாரி மோதிய விபத்தில், பொறியியல் மாணவர் பலி!

விழுப்புரம்

விழுப்புரம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், பொறியியல் மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள பைத்தாம்பாடி பகுதியை சேர்ந்தவர் சிவாஜி. இவரது மகன் கார்த்திக் (22). இவர் சென்னையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் இறுதியாண்டு படித்து வந்தார். இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு கார்த்திக் விழுப்புரத்தில் இருந்து உளுந்தூர்பேட்டை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

பைக் மீது லாரி மோதிய விபத்தில், பொறியியல் மாணவர் பலி!

விழுப்புரம் அடுத்த இந்திரா நகர் மேம்பாலம் அருகே சென்றபோது, கார்த்திக் வாகனம் மீது பின்னால் வந்த லாரி மோதியது. இதில் சாலையில் தூக்கிவீசப்பட்ட கார்த்திக், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவல் அறிந்த விழுப்புரம் தாலுகா போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விக்கிரவாண்டியை சேர்ந்த லாரி ஓட்டுநர் முத்தரசு (38) என்பவரை போலீசார் கைது செய்தனர்.