விஷம் கலந்த உணவை சாப்பிட்டு, ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!

 

விஷம் கலந்த உணவை சாப்பிட்டு, ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!

விருதுநகர்

விருதுநகர் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டம் காரியாப்பட்டி அடுத்துள்ள முஸ்டக்குறிச்யை சேர்ந்தவர் அடைக்கலம் (78). இவருக்கு முனியம்மாள்(45) என்ற மகளும், ஜெயலலிதா (17) என்ற பேத்தியும் உள்ளனர். அடைக்கலத்தின் வீட்டின் அருகிலேயே, தாய் – மகள் இருவரும் வசித்து வந்தனர். முனியம்மாள் தனது மகளை, உறவினர் மகனுக்கு திருமணம் செய்துவைக்க ஏற்பாடு செய்து வந்தார்.

விஷம் கலந்த உணவை சாப்பிட்டு, ஓரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை!

இதனிடையே, சில நாட்களுக்கு முன்பு முனியம்மாளுக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்படவே, அவர் வீட்டில் இருந்தபடி சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், நேற்றிரவு அடைக்கலம், முனியம்மாள் மற்றும் ஜெயலலிதா ஆகிய மூவரும் விஷம் கலந்த உணவை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இன்று காலை நீண்ட நேரம் ஆகியும் 2 வீடுகளும் திறக்காததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்தனர்.

அப்போது, வீட்டில் மூவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக கிடந்தனர். இதுகுறித்து, தகவலின் பேரில் ஆவியூர் போலீசார் சடலங்களை கைப்பற்றி காரியபட்டி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.