மது அருந்த பணம் தராததால் ஆத்திரம்… மனைவியை எரித்துக்கொன்று, கணவர் தற்கொலை!

 

மது அருந்த பணம் தராததால் ஆத்திரம்… மனைவியை எரித்துக்கொன்று, கணவர் தற்கொலை!

திருவண்ணாமலை

செய்யாறு அருகே மது அருந்த பணம் தராததால் மனைவியை எரித்து கொன்று, கணவரும் தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த முளைகிரிபட்டு பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவரது மனைவி பார்வதி. இவர்களுக்கு 2 மகன்களும் உள்ளனர். குடும்பத்துடன் சென்னையில் தங்கி வேலை செய்து வந்த சங்கர், நேற்று முன்தினம் மனைவியுடன் முளைகிரிபட்டிற்கு வந்திருந்தார். இந்த நிலையில், நேற்றிரவு சங்கர், மது அருந்த பணம் கேட்டு பார்வதியிடம் தகராறு செய்துள்ளார்.

மது அருந்த பணம் தராததால் ஆத்திரம்… மனைவியை எரித்துக்கொன்று, கணவர் தற்கொலை!

அவர் ஏற்கனவே மது அருந்தியிருந்ததால், பார்வதி பணம் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சங்கர், வீட்டில் இருந்த மண்ணெண்ணையை எடுத்து பார்வதியின் மீது ஊற்றி தீ வைத்தார். பின்னர் தன் மீதும் மண்ணெண்ணையை ஊற்றி பற்ற வைத்து கொண்டார். உடலில் தீப்பற்றியதால் தம்பதியினர் இருவரும் அலறி துடிக்கவே, அக்கம் பக்கத்தினர் சென்று தீயை அணைத்தனர்.

இதில், உடல் கருகி பார்வதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். படுகாயமடைந்த சங்கரை செய்யாறு போலீசார் மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில், இன்று காலை அவர் உயிரிழந்தார். இதுகுறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.