இருசக்கர வாகனம் மீது சுற்றுலா பேருந்து மோதல் – இருவர் பலி!

 

இருசக்கர வாகனம் மீது சுற்றுலா பேருந்து மோதல் – இருவர் பலி!

திண்டுக்கல்

திண்டுக்கல் அருகே இருசக்கர வாகனமும், சுற்றுலா பேருந்தும் நேருக்கு நேர் மோதிகொண்ட விபத்தில், 2 இளைஞர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள கொசவப்பட்டி ஆனந்தபுரத்தை சேர்ந்தவர் வடிவேல் (24). கரூர் மாவட்டம் சின்னவாங்கல் பாளையத்தை சேர்ந்தவர் பிரபு. நண்பர்களான இருவரும், நேற்று எரியோட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் வடமதுரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

இருசக்கர வாகனம் மீது சுற்றுலா பேருந்து மோதல் – இருவர் பலி!

திருச்சி – திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் தென்னம்பட்டி பிரிவு அருகே சென்றபோது இருசக்கர வாகனத்தின் மீது, எதிரே வந்த சுற்றுலா பேருந்து மோதி விபத்திற்கு உள்ளானது. இதில், படுகாயம் அடைந்த வடிவேல் மற்றும் பிரபு ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த வடமதுரை போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து பெரியகுளத்தை சேர்ந்த சுற்றுலா பேருந்து ஓட்டுநர் சதீஷ்குமார் என்பவர் மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.