சாலையோர மரத்தின் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

 

சாலையோர மரத்தின் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையேர மரத்தின் மீது மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பஹள்ளி அருகேயுள்ள பந்திகுறி கிராமத்தை சேர்ந்தவர் ரவி (40). கார் ஒட்டுநர். இவரது நண்பர்கள் சின்னசூளாமலை பகுதியை சேர்ந்த ஸ்டீபன்(28) மற்றும் திம்மராஜ் (30). இவர்கள் மூவரும் நேற்று முன்தினம் இரவு. காரில் வேப்பனஹள்ளயில் இருந்து கிருஷ்ணகிரி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

சாலையோர மரத்தின் மீது கார் மோதி விபத்து – இருவர் பலி!

குந்தாரப்பள்ளி அருகே நரணிகுப்பம் பகுதியில் சென்றபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், தறிகெட்டு ஓடி சாலையோரம் இருந்த மத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் ரவி மற்றும் ஸ்டீபன் ஆகியார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். திம்மராஜ் படுகாயம் அடைந்தார்.

தகவல் அறிந்த குருபரப்பள்ளி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஸ்டீபனை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்த போலீசார், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.