இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், விவசாயி பலி!

 

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், விவசாயி பலி!

திருப்பூர்

தாராபுரம் அருகே இருசக்கர வாகனம் மீது பாரம் ஏற்றிவந்த லாரி மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த நந்தவன பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி ஈஸ்வர மூர்த்தி. இவர் அதே பகுதியை சேர்ந்த நடராஜ் என்பவருடன் நேற்று மருதூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். உப்பாறு பாலம் அருகே வளைவில் திரும்பிய போது, ஈஸ்வரமூர்த்தி வாகனத்தின் மீது, எதிரே வெங்காய பாரம் ஏற்றி வந்த லாரி மோதி விபத்திற்குள்ளானது.

இருசக்கர வாகனம் மீது லாரி மோதிய விபத்தில், விவசாயி பலி!

இந்த விபத்தில் பலத்த காயமடைந்த இருவரையும், அருகில் இருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக தாராபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே ஈஸ்வர மூர்த்தி உயிரிழந்து விட்டார்.

அங்கு நடராஜுக்கு முதலுதவி சிகிச்சை அளித்த நிலையில் பின்னர், மேல் சிகிச்சைக்காக திருப்பூர் அரசு மருத்துவனைக்கு கொண்டு செல்லப்பட்டார். விபத்து குறித்து குண்டடம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.