துவரங்குறிச்சி அருகே கார் மோதி 2 பெண்கள் உயிரிழப்பு!

 

துவரங்குறிச்சி அருகே கார் மோதி 2 பெண்கள் உயிரிழப்பு!

திருச்சி

துவரங்குறிச்சி அருகே கார் மோதிய விபத்தில் 2 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே உள்ள பளுவஞ்சி கிராமத்தை சேர்ந்தவர் போதும் பொண்ணு (50). அதே பகுதியை சேர்ந்தவர் தங்கம் (40). ஒப்பந்த தொழிலாளர்களான இருவரும், துவரங்குறிச்சி பகுதியில் உள்ள திருச்சி – மதுரை நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள செடிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது, சாத்தூரில் இருந்து திருச்சி நோக்கி சென்ற கார் ஒன்று, சாலையோரம் நின்றிருந்த பெண் தொழிலாளர்கள் மீது அதிவேகமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த போதும்பொண்ணு மற்றும் தங்கம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும்,புதுகோட்டையை சேர்ந்த வள்ளி என்பவர் படுகாயம் அடைந்தார்.

துவரங்குறிச்சி அருகே கார் மோதி 2 பெண்கள் உயிரிழப்பு!

அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். தகவல் அறிந்த துவரங்குறிச்சி போலீசார் இருவரது சடலங்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மணப்பாறை அரசு மருத்துவனைக்கு அனுப்பினர்.

மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, சாத்துரை சேர்ந்த கார் ஓட்டுநர் வெங்கடாசலபதி என்பவரை கைதுசெய்னர். இதனிடையே உயிரிழந்த பெண்களின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.