இருசக்கர வாகனம் மீது மினி வேன் மோதிய விபத்தில், தம்பதி பலி!

 

இருசக்கர வாகனம் மீது மினி வேன் மோதிய விபத்தில், தம்பதி பலி!

நெல்லை

சேரன்மகாதேவி அருகே இருசக்கர வாகனம் மீது சரக்கு ஆட்டோ மோதிய விபத்தில் மத போதகர் மற்றும் அவரது மனைவி பரிதாபமாக உயிரிழந்தனர்.

தென்காசி மாவட்டம் வி.கே.புரம் அருகே உள்ள புலவன்பட்டி பகுதியை சேர்ந்தவர் மதபோதகர் சுந்தர் (55). இவர் நேற்று தனது மனைவி அன்ன பாக்கியம் (50) மற்றும் பேத்தி ஷெர்லிட் (3) ஆகியோரை அழைத்துக் கொண்டு நெல்லை மாவட்டம் களக்காட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.

இருசக்கர வாகனம் மீது மினி வேன் மோதிய விபத்தில், தம்பதி பலி!

சேரன்மகாதேவி அடுத்த குரங்குமடம் விலக்கு பகுதியில் சென்றபோது சுந்தர் வாகனத்தின் மீது எதிரே வந்த சரக்கு ஆட்டோ மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் சாலையில் தூக்கி வீசப்பட்ட சுந்தர் மற்றும் அன்னபாக்கியம் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிறுமி ஷெர்லிட் படுகாயம் அடைந்தார்.

அருகில் இருந்தவர்கள் சிறுமியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்த தகவல் அறிந்த சேரன் மகாதேவி போலீசார், சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும்,இது குறித்து வழக்குப் பதிந்து, மினிவேன் ஓட்டுநர் முத்துக்குமார் என்பவரை கைது செய்தனர்.