இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், இருவர் பலி!

 

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், இருவர் பலி!

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனமும், காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அடுத்த அட்டப்பள்ளத்தை சேர்ந்தவர் சுப்ரமணி(48). விவசாயி. இதேபோல் சித்தகுண்டா கிராமத்தை சேர்ந்தவர் முருகன். உறவினர்களான இருவரும், நேற்று முன்தினம் கடவரஹள்ளி பகுதியில் நடந்த துக்க நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.

பின்னர், மாலை இருவரும் இருசக்கர வாகனத்தில் சொந்த ஊருக்கு திரும்பி கொண்டிருந்தனர். ராயக்கோட்டை அருகே தக்காளி மண்டி பகுதியில் சென்றபோது சுப்ரமணியின் வாகனத்தின் மீது, எதிரே வந்த கார் அதிவேகமாக மோதியது. இதில் சுப்ரமணி மற்றும் முருகன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.

இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில், இருவர் பலி!

அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு, கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு சிகிசைக்காக அனுப்பி வைத்தனர். மருத்துவமனையில் சுப்ரமணி கிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். முருகனை மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசென்றபோது, வழியிலேயே அவரும் உயிரிழந்தார்.

தகவல் அறிந்த ராயக்கோட்டை போலீசார், இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.