கண்மாயில் மூழ்கி அக்கா, தங்கை பலி!

 

கண்மாயில் மூழ்கி அக்கா, தங்கை பலி!

தூத்துக்குடி

தூத்துக்குடி அருகே கண்மாயில் குளித்தபோது நீரில் மூழ்கி அக்கா, தங்கை பரிதாபமாக உயிரிழந்தனர்.

தூத்துக்குடி கோமஸ்புரம் ராஜீவ்காந்தி நகர் குடியிருப்பை சேர்ந்தவர் போஸ் இமானுவேல். கூலி தொழிலாளி. இவரது மகள்கள் சஞ்சனா (14) மற்றும் சப்ரினா (10). இவர்கள் அங்குள்ள பள்ளியில் முறையே 9 மற்றும் 5ஆம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்த நிலையில், சஞ்சனா மற்றும் சப்ரினா ஆகியோர், நேற்று அதே பகுதியை சேர்ந்த சிறுவர்களுடன் துப்பாஸ்பட்டி பகுதியில் உள்ள கண்மாய்க்கு குளிக்க சென்றனர். கண்மாயில் இறங்கி குளித்தபோது சகோதரிகள் இருவரும் எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கி மாயமாகினார்.

கண்மாயில் மூழ்கி அக்கா, தங்கை பலி!

இதனை கண்ட சிறுமிகள் கூச்சலிடவே, அந்த பகுதி இளைஞர்கள் கால்வாயில் இறங்கி தேடினர். அப்போது சகோதகரிகள் இருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். தகவல் அறிந்த தாளமுத்து நகர் போலீசார் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.