பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குழந்தையுடன் குதித்து, மென் பொறியாளர் தற்கொலை!

 

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குழந்தையுடன் குதித்து, மென் பொறியாளர் தற்கொலை!

நாமக்கல்

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் ஒன்றரை வயது ஆண் குழந்தையுடன் குதித்து மென்பொறியாளர் தற்கொலை செய்து கொணடார்.

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அடுத்த படைவீடு அக்ரஹாரம் பகுதியை சேர்ந்தவர் மென் பொறியாளர் சுரேஷ். இவருக்கு திருமணமாகி ரம்யா (28) என்ற மனைவியும், ஒன்றரை வயதில் இனியவன் என்ற ஆண் குழந்தை இருந்தது. கத்தாரில் பணிபுரிந்த சுரேஷ், கடந்த ஆண்டு கொரோனா காரணமாக சொந்த ஊருக்கு திரும்பினார்.

பள்ளிபாளையம் காவிரி ஆற்றில் குழந்தையுடன் குதித்து, மென் பொறியாளர் தற்கொலை!

இந்த நிலையில், சுரேஷூக்கு கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மன வேதனையில் இருந்து வந்த அவர், நேற்று வீட்டில் இருந்த குழந்தையை அழைத்து கொண்டு பள்ளிபாளையம் காவிரி ஆற்று பாலத்துக்கு சென்றுள்ளார். பின்னர், பாலத்தில் இருந்து குழந்தையுடன் காவிரி ஆற்றில் குதித்து அவர் தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து, தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார், பரிசல் மூலம் இருவரது சடலங்களையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, சுரேஷின் உறவினர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.