பயிற்சி தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், பிளஸ் 2 மாணவி தற்கொலை!

 

பயிற்சி தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், பிளஸ் 2 மாணவி தற்கொலை!

ஈரோடு

ஈரோடு அருகே வகுப்பு தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்ததால் விரக்தியில் பிளஸ் 2 மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருகேயுள்ள ஈங்கூர் பகுதியை சேர்ந்தவர் கருணாமூர்த்தி. இவரது மகள் சௌபர்ணிகா (17). இவர் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்தார். கொரோனா பரவல் காரணமாக ஆன்லைன் மூலம் வகுப்பில் பங்கேற்று வந்துள்ளார்.

பயிற்சி தேர்வில் மதிப்பெண் குறைந்ததால், பிளஸ் 2 மாணவி தற்கொலை!

இந்த சமீபத்தில் நடந்த பயிற்சி தேர்வில் குறைந்த மதிப்பெண்களை எடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட சௌபர்ணிகா, நேற்று முன்தினம் வீட்டில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கி நிலையில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சௌபர்ணிகா, அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் சென்னிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.