கொரோனா பரிசோதனைக்கு பயந்து, கூலி தொழிலாளி தற்கொலை!

 

கொரோனா பரிசோதனைக்கு பயந்து, கூலி தொழிலாளி தற்கொலை!

ராணிப்பேட்டை

அரக்கோணம் அருகே கொரோனா பரிசோதனை எடுக்க பயந்து, கூலி தொழிலாளி கிணற்றில் குதித்து தற்கொலை செய்துகொண்டார்.

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தக்கோலம் சுப்பா நாயுடு கண்டிகை பகுதியை சேர்ந்தவர் சரவணன்(46). கூலி தொழிலாளி. இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் கல்லூரி படிக்கும் மகளும் உள்ளனர். இந்த நிலையில், சரவணனுக்கு, கடந்த 3 நாட்களாக காய்ச்சல் இருந்து வந்துள்ளது.

கொரோனா பரிசோதனைக்கு பயந்து, கூலி தொழிலாளி தற்கொலை!

இதனால், உறவினர்கள் அவரை கொரோனா பரிசோதனை எடுக்கும்படி கட்டாயப்படுத்தி உள்ளனர். பரிசோதனை எடுக்க அச்சமடைந்த சரவணன் நேற்று காலை, அதே கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், தக்கோலம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.