நெல்லையில் வேகமெடுக்கும் கொரோனா; பாதிப்பு 2,408 ஆக அதிகரிப்பு!

 

நெல்லையில் வேகமெடுக்கும் கொரோனா; பாதிப்பு 2,408 ஆக அதிகரிப்பு!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,549 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,56,369 ஆக அதிகரித்துள்ளது. மேலும் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,236 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே சென்னையை தவிர பிற மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. அதனால் பாதிப்பு அதிகமாக இருக்கும் 15 மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமை செயலாளர் சண்முகம் இன்று ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார்.

நெல்லையில் வேகமெடுக்கும் கொரோனா; பாதிப்பு 2,408 ஆக அதிகரிப்பு!

இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தின் கொரோனா பாதிப்பு விவரம் வெளியாகியுள்ளது. அம்மாவட்டத்தில் மேலும் 180 பேருக்கு கொரோனா உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,408 ஆக உயர்ந்துள்ளது. மேலும், அதிகபட்சமாக நெல்லை மாநகராட்சி பகுதியில் மட்டுமே 77 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.