தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை கைது செய்ய உத்தரவு

 
வ்

தடுப்பூசி திருத்திக் கொள்ளாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என்று உத்தரவை  பிறப்பிக்கப்பட்டிருக்கிறது அரசு.   இந்த உத்தரவை மீறினால் கைது செய்யப்படுவார்கள் என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது அரசு.   பிலிப்பைன்ஸ் அரசுதான் அந்நாட்டு மக்களுக்கு இந்த எச்சரிக்கை விடுத்திருக்கிறது.

கொரோனா தொற்று பரவல்  பிலிப்பைன்ஸ் நாட்டிலும் அதிகரித்து வருகிறது.   ஆகவே,  இந்த கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த பிலிப்பைன்ஸ் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.  அனைத்து மக்களும் தடுப்பூசிகளை செலுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசு தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களுக்கு அரசு கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறது .  தடுப்பு ஊசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொதுப் போக்குவரத்தை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது .

வ்வ்

தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் பொதுமக்களுக்கு ஆபத்தானவர்கள் என்று அரசும் குற்றம்சாட்டி இருக்கிறது.  அதனால் தடுப்பு ஊசி செலுத்திக் கொள்ளாதவர்களை கைது செய்ய அரசு முடிவு செய்திருக்கிறது.    

 கொரோனா தடுப்பு ஊசியை செலுத்தி கொள்ளாதவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது.   இதை மீறினால் கைது செய்யப்படுவார்கள் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் டொடி ரிஹோ டுடர்டி அறிவித்திருக்கிறார்.   மேலும் இதற்கான உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். 

 இதன் பின்னர் தடுப்பூசி செலுத்தாதவர்கள் பட்டியலை அதிகாரிகள் சேகரிக்க தொடங்கியிருக்கிறார்கள்.   அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்ட உடன் தடுப்பூசி எடுத்துக் கொள்ளாதவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி வேகமாக நடைபெறும் என்று அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.