இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், தொழிலாளி பலி!

 

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், தொழிலாளி பலி!

கோவை

கோவை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிகொண்ட விபத்தில் கட்டுமான தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை மாவட்டம் கோவில்பாளையம் அருகே உள்ள கோட்டைபாளையம் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (52). கட்டிட தொழிலாளி. இவர் நேற்று மாலை உடன் பணிபுரியும் மூர்த்தி (25) என்பவருடன் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

கோட்டைப்பாளையம் அருகேயுள்ள ஏ.எஸ். குளம் அருகே சென்றபோது லோகநாதன் வாகனத்தின் மீது, எதிரே அர்ஜூனன் என்பவர் ஓட்டி வந்த வாகனம் நேருக்கு நேர் மோதியது. இதில் லோகநாதன் மற்றும் மூர்த்தி ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரையும் அந்த பகுதி மக்கள் மீட்டு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிய விபத்தில், தொழிலாளி பலி!

அங்கு லோகநாதன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மூர்த்திக்கு, தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து கோவில்பாளையம் காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.