இருசக்கர வாகனம் மீது ஆம்னிபேருந்து மோதியதில், விவசாயி பலி!

 

இருசக்கர வாகனம் மீது ஆம்னிபேருந்து மோதியதில், விவசாயி பலி!

தென்காசி

தென்காசி அருகே இருசக்கர வாகனம் மீது ஆம்னி பேருந்து மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.

தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர் அடுத்த கலைஞர் காலனி பகுதியை சேர்ந்தவர் விவசாயி பால்சாமி(50). இவர் நேற்று வாசுதேவநல்லூர் சென்றுவிட்டு தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். தென்காசி – மதுரை புறவழிச் சாலையில் சென்றபோது, பின்னால் வந்த தனியார் ஆம்னி பேருந்து ஒன்று, பால்சாமி வாகனத்தின் மீது மோதியது.

இருசக்கர வாகனம் மீது ஆம்னிபேருந்து மோதியதில், விவசாயி பலி!

இதில் வாகனத்தில் இருந்து தூக்கிவீசப்பட்ட அவர், பலத்த காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் பால்சாமியை மீட்டு சிகிச்சைக்காக புளியங்குடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், பலனின்றி பால்சாமி உயிரிழந்தார்.

தகவல் அறிந்த வாசுதேவநல்லூர் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து, ஆம்னி பேருந்து ஓட்டுநரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.