மதுரையில் பெண் உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி!

 

மதுரையில் பெண் உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி!

மதுரை

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட திருச்சி தமிழ்நாடு சிறப்பு காவல் படையின் பெண் உதவி ஆய்வாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

மதுரை மகபூப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ராஜேஸ்வரி. இவர் திருச்சியில் உள்ள தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். ஈரோட்டிற்கு தேர்தல் பணிக்கு சென்று திரும்பிய ராஜேஸ்வரிக்கு சமீபத்தில் உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர் ஶ்ரீரங்கத்தில் உள்ள தனியார் மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

மதுரையில் பெண் உதவி ஆய்வாளர் கொரோனாவுக்கு பலி!

இதனிடையே, அங்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதியானதால், குடும்பத்தினர் ராஜேஸ்வரியை மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடிவெடித்தனர்.மதுரை அரசரடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கை இருப்பதாக கூறியதால், நேற்று முன்தினம் ராஜேஸ்வரி ஆம்புலன்ஸ் மூலம் மதுரைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

அதற்குள்ளாக படுக்கைகள் நிரம்பிவிட்டதாக தனியார் மருத்துவமனை நிர்வாகம் கூறியதால், குடும்பத்தினர் அவரை மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் மருத்துவமனை செல்லும் வழியிலேயே அவர் பரிதாகமாக உயிரிழந்தார். ஆக்சிஜன் படுக்கை கிடைக்காததால் உதவி ஆய்வாளர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.