மகன்களின் உயிரைப் பறித்த கொரோனா… அதிர்ச்சியில் தாய் மரணம்!

 

மகன்களின் உயிரைப் பறித்த கொரோனா… அதிர்ச்சியில் தாய் மரணம்!

திருப்பத்தூர் மாவட்டம் குன்னத்தூர் பகுதியை சேர்ந்த மூதாட்டி பாப்பாள்(70) இவர்களது மகன்கள் 4 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்துள்ளனர். இவரது மூன்றாவது மகன் கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கடந்த 9ஆம் தேதி அவர் உயிரிழந்துள்ளார். அவர் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அவரது மனைவியும் உயிரிழந்துள்ளார்.

மகன்களின் உயிரைப் பறித்த கொரோனா… அதிர்ச்சியில் தாய் மரணம்!

இதையடுத்து, மூதாட்டியின் இரண்டாவது மகன் கடந்த 19ம் தேதியும், மூத்த மகன் 20ஆம் தேதியும் அடுத்தடுத்து உயிரிழந்துள்ளனர். கடைசி மகனும் கடந்த 24ஆம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். மூதாட்டியின் மகன்கள் 4 பேரும் அடுத்தடுத்து உயிரிழந்தது தொடர்பாக மூதாட்டிக்கு தகவல் கொடுக்க படாமலேயே இருந்துள்ளது. வழக்கமாக தன்னை பார்க்க வரும் மகன்கள் சில நாட்களாக பார்க்க வராதது குறித்து மூதாட்டி அக்கம் பக்கத்தினரிடம் கேட்டுள்ளார். அவரது மகன்களும் ஒரு மருமகளும் கொரோனாவால் உயிரிழந்த தகவல் மூதாட்டிக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைக் கேட்டு மனமுடைந்த மூதாட்டி நேற்று இரவு திடீரென உயிரிழந்துள்ளார். தனது மகன்கள் இருந்த துக்கத்தில் தாயாரும் உயிரிழந்த இச்சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.