“8 மாத கைக்குழந்தையுடன் சிறையில் மனைவி” பப்ஜி மதன் சரணடையத் இருப்பதாக தகவல்!

 

“8 மாத கைக்குழந்தையுடன் சிறையில் மனைவி” பப்ஜி மதன் சரணடையத் இருப்பதாக தகவல்!

தலைமறைவாக உள்ள பப்ஜி மதன் போலீசிடம் சரணடையத் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

“8 மாத கைக்குழந்தையுடன் சிறையில் மனைவி” பப்ஜி மதன் சரணடையத் இருப்பதாக தகவல்!

‘டாக்சிக் மதன் 18+’ என்ற யூடியூப் சேனலில் ஆபாச வார்த்தைகளுடன் தடைசெய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை நேரலை செய்து வந்த பப்ஜி மதன் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும் இந்த வீடியோக்களில் ஆபாசமாகப் பேசிய பெண்ணின் குரல் மதனின் மனைவி கிருத்திகா உடையது என்பதை கண்டுபிடித்த போலீசார், சேனல் நிர்வாகியான அவரை நேற்று கைது செய்தனர். இதை தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் 8 மாத கைக்குழந்தையுடன் சிறையில் அடைக்கப்பட்டார்.

“8 மாத கைக்குழந்தையுடன் சிறையில் மனைவி” பப்ஜி மதன் சரணடையத் இருப்பதாக தகவல்!

இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், “பப்ஜி மதனின் மனைவியை கைது செய்துள்ளோம். மதன் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் உள்ளது. மதனை தேடி வருகிறோம்; விரைவில் கைது செய்வோம் ” என்றார்.இந்த சூழலில் தலைமறைவாக உள்ள பப்ஜி மதன் போலீசிடம் சரணடையத் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மனைவி மற்றும் குழந்தை சிறையில் உள்ள நிலையில் அவர் சரணடையவுள்ளதாக தெரிகிறது.யுடியூப் மூலம் சம்பாதித்த பணத்தை பங்குவர்த்தகம் மற்றும் பிட்காயினில் மதன் முதலீடு செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது. மதன் மீது போக்சோ சட்டத்திலும் நடவடிக்கை எடுக்க ஆதாரங்களை சேகரிக்கிறது போலீஸ். இதனால் அவரின் வங்கி கணக்குகள் குறித்து ஆய்வு நடந்து வருகிறது.