குடும்ப தகராறில் கூலி தொழிலாளி, விஷம் குடித்து தற்கொலை!

 

குடும்ப தகராறில் கூலி தொழிலாளி, விஷம் குடித்து தற்கொலை!

தருமபுரி

பாலக்கோடு அருகே குடும்ப தகராறில் விஷம் குடித்த கூலி தொழிலாளி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகேயுள்ள கூலன்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் மூர்த்தி (36). கூலி தொழிலாளி. இவருக்கு கவிதா என்ற மனைவியும், இரு குழந்தைகளும் உள்ளனர். இதனிடையே, மூர்த்தி மதுப் பழக்கத்திற்கு அடிமையானதாக கூறப்படுகிறது. இதனை கண்டித்ததால் மூர்த்தி – கவிதா இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

குடும்ப தகராறில் கூலி தொழிலாளி, விஷம் குடித்து தற்கொலை!

இந்த நிலையில். கடந்த வாரம் ஏற்பட்ட குடும்ப தகராறில் கவிதா குழந்தைகளை அழைத்துகொண்டு பெற்றோர் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனவேதனையில் இருந்து வந்த மூர்த்தி, நேற்று முன்தினம் வீட்டில் விஷத்தை குடித்து தற்கொலைக்கு முயன்றார். மயங்கிய நிலையில் கிடந்த மூர்த்தியை உறவினர்கள் மீட்டு காவேரிபட்டினம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

பின்னர், மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்ட அவர், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். தற்கொலை சம்பவம் குறித்து மகேந்திரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.