குடும்ப தகராறில் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை!

 

குடும்ப தகராறில் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை!

காஞ்சிபுரம்

காஞ்சிபுரம் அருகே குடும்ப தகராறில் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஞ்சீபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகேயுள்ள வன்னியர்பேட்டை பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (38). ராணுவ வீரரான இவர், ஒடிசா மாநிலத்தில் பணிபுரிந்து வந்தார். இவருக்கு நதியா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

இந்த நிலையில், செந்தில்குமார் கடந்த வாரம் விடுமுறையில் காஞ்சிபுரத்திற்கு வந்திருந்தார். அப்போது, தம்பதியினர் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் சில நாட்களுக்கு முன்பு நதியா கோபித்துக் கொண்டு, வீட்டில் இருந்து வெளியேறி உள்ளார்.

குடும்ப தகராறில் ராணுவ வீரர் தூக்கிட்டு தற்கொலை!

மனைவி பிரிந்து சென்றதால் செந்தில்குமார் மனமுடைந்து காணப்பட்டு வந்து உள்ளார். இந்த நிலையில், நேற்று வீட்டில் மதுபோதையில் இருந்த அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில், வாலாஜாபாத் போலீசார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், தற்கொலை சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.