கொரோனாவால் இறந்த நபரின் அடக்கம் உடலை செய்ய எதிர்ப்பு : நேற்று இரவிலிருந்து ஆம்புலன்ஸிலேயே கிடக்கும் உடல்!
Aug 5, 2020, 08:14 IST1596595491000
தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 5,063பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,68,285 ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில் விழுப்புரம் செஞ்சி அருகே கொரோனாவால் இறந்த நபரின் உடலை அடக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கிராம மக்கள் சாலையில் மரத்தை வெட்டி போட்டதால் நேற்று இரவிலிருந்து கொரோனாவால் இறந்தவரின் உடல் ஆம்புலன்ஸிலேயே இருக்கிறது. இதனால் மாற்று இடத்தில் உடலை அடக்கம் செய்ய கிராம மக்களுடன் போலீசார் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்