மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை!

 

மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை!

பஞ்சாபில் மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து கரோனா நோயாளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவிலும் கொரோனா தாக்கம் நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே வரும் நிலையில் ஜூலை 31 ஆம் தேதி வரை 144 தடை உத்தரவு நீட்டிக்கப்படும் என மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 17லட்சத்து 50 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதுவரை 12 லட்சத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்த நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 37 ஆயிரத்து 364 ஆக அதிகரித்துள்ளது என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனாவால் பாதித்தவர்கள் மட்டுமின்றி அதனால் ஏற்படும் மன உளைச்சலால் பலர் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகமாக நடைபெற்று வருகிறது. இது போன்ற சம்பவம் இன்று பஞ்சாபிலும் அரங்கேறியுள்ளது.

மருத்துவமனை மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை!

தலைநகர் சண்டிகரில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்த 62 வயது நபர் ஒருவர் கடந்த 31 ஆம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்த அந்த நபர், இன்று மருத்துவமனையின் ஐந்தாவது மாடியிலிருந்து விழுந்து தற்கொலை செய்துகொணார். இதில் அவருக்கு உடலில் பல இடங்களில் எலும்புமுறிவு ஏற்பட்டு, தலையிலும் பலத்த காயம் ஏற்பட்டது இதனையடுத்து அவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கட்டார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.