திருப்பதி விஜிலென்ஸ் அதிகாரி கொரோனாவுக்கு பலி!

 

திருப்பதி விஜிலென்ஸ் அதிகாரி கொரோனாவுக்கு பலி!

உலகளவில் கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 2.20 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் இந்தியாவில் தொற்று எண்ணிக்கை 26 லட்சத்தைக் கடந்ததுள்ளது. மேலும் சுமார் 50,000 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து போராடி வருகிறது.

திருப்பதி விஜிலென்ஸ் அதிகாரி கொரோனாவுக்கு பலி!

இந்நிலையில் திருப்பதியில் விஜிலென்ஸ் அதிகாரி மகேஷ்வர ராவ் கொரோனா தொற்றால் பலியாகியுள்ளார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

திருப்பதி விஜிலென்ஸ் அதிகாரி கொரோனாவுக்கு பலி!

முன்னதாக திருப்பதியில் 170ற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில் நாளுக்கு நாள் கொரோனா தொற்றின் வேகம் அங்கு அதிகரித்து வருகிறது.