வந்தவாசி திமுக நிர்வாகி கொரோனாவால் உயிரிழந்தார்!

 

வந்தவாசி திமுக நிர்வாகி  கொரோனாவால் உயிரிழந்தார்!

தமிழகத்தில் கொரோனாபாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,985 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,75,678 ஆக அதிகரித்துள்ளது. நேற்று மட்டும் 70 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர்.

வந்தவாசி திமுக நிர்வாகி  கொரோனாவால் உயிரிழந்தார்!

இதன்மூலம் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2,551 ஆக அதிகரித்துள்ளது. இதனால் சென்னை உள்பட சில மாவட்டங்களில் முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சென்னையில் 87,235 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.இருப்பினும் சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக தொற்று அதிகரித்துள்ளது.

வந்தவாசி திமுக நிர்வாகி  கொரோனாவால் உயிரிழந்தார்!

இந்நிலையில் வந்தவாசி திமுக நகர செயலாளர் கோட்டை பாபு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார். திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோட்டை பாபு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். திமுக பேரூர் செயலாளர் ஜெயச்சந்திரன் கொரோனாவால் இறந்தது கவனிக்கத்தக்கது.