கொத்தவால்சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம்!
Jul 13, 2020, 08:11 IST1594608066000
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகமாகி கொண்டே செல்கிறது. நேற்று ஒரேநாளில் தமிழகம் வந்தவர்கள் உட்பட 4,244 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்மூலம் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,38,470 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் கொரோனா பாதித்த நபர்களின் மொத்த எண்ணிக்கை 77,338 ஆக உயர்ந்துள்ளது.
கொத்தவால்சாவடி சந்தை பாரிமுனை பேருந்து நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தனிமனித இடைவெளி கூட்ட நெரிசலை தவிர்க்க கொத்தவால்சாவடி சந்தை இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. பாரிமுனை பேருந்து நிலையத்தில் இயங்கும் சந்தையில் மக்கள், வியாபாரிகள் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாஸ்க் அணியாவிட்டால் ரூ.500 அபராதம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.