போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளிப்பு!

 

போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளிப்பு!

ஆம்பூரில் கொரோனா வைரஸ் நோய் தொற்று காரணமாக தடுப்பு பணியில் இருந்த காவலர் வாகனத்தை பறிமுதல் செய்ததால் ஆத்திரமடைந்த இளைஞர் தீக்குளித்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்ததால் இளைஞர் தீக்குளிப்பு!

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கொரோனா வைரஸ் நோய்த் தடுப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவலர் சந்திரசேகர் என்பவர் அவ்வழியாக வந்த ஆம்பூர் அண்ணாநகர் பகுதியை சேர்ந்த முகிலன் என்பவரை தடுத்து நிறுத்தி வாகனத்தை பறிமுதல் செய்தார். இதனால்ஆத்திரமடைந்த முகிலன் வீட்டில் சென்று வைக்கப்பட்டிருந்த மண்ணெண்ணெய் கேனை கொண்டுவந்து வாகன சோதனை செய்யப்பட்டுக் கொண்டிருந்த இடத்தில் காவலர்கள் முன்னிலையில் தீ வைத்துக் கொண்டார்.

இதனால் தேசிய நெடுஞ்சாலையில் தீக்காயங்களுடன் கீழே விழுந்த அவரை மீட்டு அப்பகுதி மக்கள் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 90 சதவீத தீக்காயங்களுடன் வேலூர் மருத்துவமனையில் முகிலன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.