உதயநிதி அலுவலகத்தில் ஒரு லட்சம் ரூபாயை ஆட்டைய போட்டவர் சிக்கினார்

 
உ

 சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் நிர்வாகிகளுக்கு வழங்க இருந்த ஒரு லட்சம் ரூபாய் பரிசுத்தொகையை திருடிச் சென்ற நபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை சேப்பாக்கம் -திருவல்லிக்கேணி சட்ட மன்ற அலுவலகத்தில் திமுக நிர்வாகிகளுக்கு பரிசுத்தொகை வழங்கும் நிகழ்ச்சி கடந்த 12-ஆம் தேதியன்று நடைபெற்றது.   உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. மற்றும் தயாநிதி மாறன் எம்பி  கலந்துகொண்டு நிர்வாகிகளுக்கு பரிசுகள் வழங்கினர்.

 நிர்வாகிகளுக்கு வழங்குவதற்காக சேப்பாக்கம் தொகுதி வட்ட செயலாளர் வெங்கடேசன் ஒரு லட்சம் ரூபாயை தனது பாக்கெட்டில் வைத்திருந்தார்.  கூட்ட நெரிசலில் திடீரென்று பாக்கெட்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாய் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.   இந்த திருட்டு விவகாரம் வெளியே தெரிந்து பெரும் பரபரப்பானது.

ஊ

 இதன் பின்னர் அலுவலகத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.  அப்போது தொப்பி அணிந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் வெங்கடேசன் அருகிலேயே நீண்ட நேரமாக நின்று நோட்டமிட்டு உதயநிதி ஸ்டாலின் புறப்படும்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி வெங்கடேசனின் பாக்கெட்டில் இருந்த ஒரு லட்சம் ரூபாயை பறித்துச் செல்வது போன்ற காட்சி பதிவாகியிருந்தது.

 இதையடுத்து வெங்கடேசன் ஜாம்பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.   அந்த புகாரின் பேரில் சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை நடத்தியதில் வண்ணாரப் பேட்டையைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  அவரிடம் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றார்கள் போலீசார்.