சூர்யா வெளிநாட்டிற்கு சென்றாலும் விடாது துரத்தும் பாமக - சாணிப்பால் அபிஷேகம் செய்ய முயற்சி

 
உச்

 ஜெய்பீம் பட விவகாரத்தில் வன்னிய சமூகத்தினரை அவமதித்து விட்டதாக பாமகவினரும்,  வன்னியர் சமூகத்தினரும் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.   பாமக இந்த முடிவில் இருந்து பின்வாங்கி விடும் என்று நினைத்திருந்த சூர்யா பாமகவினர் விடாது இந்த விஷயத்தை பிடித்துக் கொண்டிருப்பதால் ஜெய்பீம் படத்தின் இயக்குநர் ஞான வேலை வைத்து வருத்தம் தெரிவிக்க வைத்திருந்தார்.   ஆனாலும் பாமகவினர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.

ச்ய்ப்

 இதனால் சூர்யாவின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு நீடித்து வருகிறது.  சூர்யா எங்கே சென்றாலும் அவருடன் இரண்டு போலீஸார் உடன் செல்கின்றனர்.  இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சூர்யா இந்த பிரச்சனையெல்லாம் ஓயும் வரை கொஞ்சம் அமைதியாக இருந்துவிட்டு வரலாம் என்பதற்காக குடும்பத்தினருடன் துபாய் சென்றிருப்பதாக தகவல்.  அவர் எங்கே சென்றாலும் இங்கே தானே வரவேண்டும் எப்படி இருந்தாலும் மன்னிப்பு கேட்க வைக்காமல் விடமாட்டோம் என்று வன்னியர் சமூகத்தினரும் பாமகவினர் பிடிவாதமாக இருக்கின்றனர்.

 சூர்யாவை எட்டி உதைத்தால் ஒரு லட்சம் சன்மானம் வழங்கப்படும் என்று மயிலாடுதுறை மாவட்ட பாமக நிர்வாகி அறிவித்திருந்தார்.  இதை தொடர்ந்து பண்ருட்டி, கரூர், சேலம், குமரி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் இந்த மாவட்டத்திற்கு சூர்யா  வரமுடியாது வர விட மாட்டோம்.  சூர்யாவின் படங்களையும் திரையிட விட மாட்டோம் என்று அந்தந்த மாவட்ட நிர்வாகிகள் அறிவித்து வருகின்றனர்.  பல மாவட்டங்களில் சூர்யாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து வருகிறார்கள்.

உய்

 இந்த நிலையில் வன்னியர் சங்க மாநில துணைத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நேற்று போராட்டம் நடந்தது. தஞ்சாவூரில் நடந்த இந்த போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின்,   வன்னியர் சமூக மக்களை இழிவுபடுத்தி படம் எடுத்து வன்முறையை ஏற்படுத்தி அமைதியை சீர்குலைக்க முடியாது.  முதல்வர் இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இல்லாவிட்டால் அடுத்த மாதம் 23 ஆம் தேதி அன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட வன்னியர் வாழும் கிராமங்களில் ஆண்களையும் பெண்களையும் இளைஞர்களையும் திரட்டி அக்னிகுண்டத்தில் சூர்யாவின் புகைப்படத்தை எரித்து போராட்டம் நடத்துவோம். 

 அப்படி போராட்டம் நடத்துபவர்களுக்கு அக்னிகுண்டம் பொறித்த அரை பவுன் காசு டாலர் வழங்கப்படும் என்று அதிரடியாக அறிவித்தார் . சூர்யாவை உதைத்தால் சன்மானம் என்று சொல்லப்பட்டு வந்த நிலையில் சூர்யாவுக்கு எதிராக போராடினாலே பரிசு என்று அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.  மேலும் சூர்யா வெளிப்படையாக அறிவித்து விட்டு தஞ்சாவூர் மாவட்டத்திற்கு வந்தால் அவருக்கு 10 லட்சம் ரூபாய் வழங்கி சாணிப் பால் அபிஷேகம் செய்யப்படும் என்று சொல்லி எச்சரிக்கை விடுத்தார்.