எஸ்.பி.பி. மற்றும் வசந்தகுமார் எம்.பி. உடல்நிலை கவலைக்கிடம்: அமைச்சர் விஜயபாஸ்கர்
Aug 21, 2020, 14:14 IST1597999444000
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் பாடகர் எஸ்பி. பாலசுப்ரமணியம் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக வெளியான தகவலால் நேற்று மாலை திரையுலகினரும், ரசிகர்கள் கூட்டு பிரார்த்தனயில் ஈடுப்பட்டனர்.
அதேபோல் கன்னியாகுமரி தொகுதி எம்பி வசந்தகுமார்(70) கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர், “காய்ச்சல், இருமல் போன்ற அறிகுறிகள் காணப்பட்டவுடன் சிகிச்சைக்கு வர வேண்டும். நோயாளிகள் தாமதமாக வருவதுதான் மருத்துவர்களுக்கு சவாலாக உள்ளது” என்று கூறிய அவர், எஸ்.பி.பி. மற்றும் வசந்தகுமார் எம்.பி. உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும் கூறினார்.