புரட்சி பாரதம் கட்சி தலைவர் மீது நில அபகரிப்பு வழக்கு

 
poo

 புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி எம்எல்ஏ  மீது நில அபகரிப்பு புகார் எழுந்துள்ளது.   சென்னை உயர் நீதிமன்றத்தில் இது தொடர்பாக வழக்கு தொடரப்பட்டு இருக்கிறது.

 புரட்சி பாரதம் கட்சியின் தலைவரான பூவை ஜெகன்மூர்த்தி கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் கீழ்வைத்தினான்குப்பம் தொகுதியில் அதிமுக சின்னத்தில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆனார்.  இவர் மீது ஓசூரில் சிறு தொழில் நிறுவனம் நடத்தி வரும் கே. ராமச்சந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார்.

 அந்த மனுவில்,   திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லியை அடுத்த நேமம் மதுரை கிராமத்தில் ஒரு ஏக்கர் 19 சென்ட் நிலத்தை கடந்த 2006ஆம் ஆண்டு வாங்கினேன்.  என் இடத்திற்கு அருகில் பூவை ஜெகன்மூர்த்திக்கு சொந்தமான நிலம் உள்ளது.   என் நிலத்தை அவருக்கு விற்கச் சொல்லி வற்புறுத்துகிறார்கள்.   வாங்கிய நாள் முதல் அதை நிம்மதியாக பயன்படுத்த முடியவில்லை.   அவருக்கு விற்கச் சொல்லி தொந்தரவு கொடுத்து வருகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார். 

poo

 மேலும்,  கடந்த 2008ஆம் ஆண்டு ஒப்பந்ததாரர் மூலம் கட்டுமான பணிகளை மேற்கொண்டேன்.  அப்போதும் எனக்கு மிரட்டல் வந்தது.  தன்னோட நிலத்தில் கட்டப்பட்டுள்ள சுற்றுச் சுவரின் ஒரு பகுதியை எடுத்து விட்டு கட்சி  என் நிலத்தில் கொடிக்கம்பத்தை நட்டதோடு  வாகனம் நிறுத்துவதற்கான செட் ஒன்றையும் அமைத்து உள்ளார் பூவை ஜெகன்மூர்த்தி என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

 மாவட்ட நிர்வாகத்திடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க அச்சப்படுகிறார்கள்.   ஜெகன்மூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க கோரி திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் கடந்த ஐந்தாம் தேதி எனக்கு சொந்தம் என்பதற்கான அனைத்து ஆவணங்களுடன் புகார் அளித்தேன்.  

 அந்த புகார் நில அபகரிப்பு பிரிவிற்கு மாற்றப்பட்ட பின்னர் இதுகுறித்து விசாரிக்க நில அபகரிப்பு பிரிவு அறிவுறுத்தப்பட்ட தாசில்தார் உத்தரவிடப்பட்டது . அப்போது என்னுடைய நிலத்தில் ஆக்கிரமிப்பு  செய்யப்பட்டுள்ளதை  நில அளவையர் கண்டறிந்ததும் பூவை ஜெகன்மூர்த்தியை காப்பாற்றும் வகையில் இதுவரை அந்த அறிக்கையை நில அபகரிப்பு பிரிவிடம் தாக்கல் செய்யவில்லை என்றும் மனுவில் தெரிவித்து இருக்கிறார்.

 நில அளவையர் அறிக்கையை நில அபகரிப்பு பிரிவில் ஒப்படைக்கவும் அதனடிப்படையில் திருவள்ளூர் மாவட்ட குற்றப்பிரிவு ஆய்வாளர் நில அபகரிப்பு டிஎஸ்பி ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்றும் தனது மனுவில் அவர் தெரிவித்திருக்கிறார்.